search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் நகை கொள்ளை"

    கோவை ரெயிலில் இளம்பெண்ணிடம் நகை- பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவரது மனைவி அனுப்பிரியா (25). இவர்கள் மன்னார்குடி- கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சியில் நேற்று இரவு ஏறினர்.

    இன்று அதிகாலை திருப்பூர் வந்ததும் அனுப்பிரியா தனது பேக்கை வைத்து வீட்டு பாத்ரூமுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பேக்கை காணவில்லை. அதில் 5 பவுன் நகை, ரூ.5.500 பணம், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் இருந்தன. மர்ம நபர் கைபையை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் ரெயில் கோவை வந்தது. கோவை ரெயில்வே போலீசில் கார்த்திக் புகார் செய்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பையை திருடிச்சென்ற நபரை தேடி வருகிறார்கள்.

    மதுரையில் அரசு பஸ்சில் இளம்பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    அண்மைக்காலமாக வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ் பயணிகளிடம் பணம், நகைகளை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. வாரத்தில் பலர் தங்களது உடைமைகளை இழந்து போலீசில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    கடந்த 15-ந்தேதி தூத்துக்குடியை சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண் பஸ்சில் மதுரைக்கு வந்தபோதுஅருகில் அமர்ந்திருந்த மர்ம பெண் 8 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது

    இந்த நிலையில் தற்போதும் வெளியூர் பெண் பயணியிடம் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி லட்சுமி (வயது39). இவர் சம்பவத்தன்று தனது மாமியாருடன் பரமக்குடியில் இருந்து கரூர் செல்வதற்காக மதுரைக்கு வந்தார்.

    எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள் ஆரப்பாளையம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது லட்சுமி தூக்கக்கலக்கத்தில் இருந்தார். அருகில் அமர்ந்திருந்த பெண் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லட்சுமியின் கைப்பையை திருடிக்கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் நகை இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×